கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில், அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில், அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழி விபரம் வருமாறு,
“இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் எம்.சுந்தாராஜன் (பணியமைப்பு), வீ.சரவணன் (கணக்கு), உதவி ஆணையர் (வருவாய்) என்.அண்ணாதுரை, சட்ட அலுவலர் அமுல்ராஜ், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், செயற்பொறியாளர்கள் வி.பார்வதி, ஆர்.சசிப்பிரியா, மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், கணக்கு அலுவலர் டி.லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு) மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உறுதிமொழி விபரம் வருமாறு,
“இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் எம்.சுந்தாராஜன் (பணியமைப்பு), வீ.சரவணன் (கணக்கு), உதவி ஆணையர் (வருவாய்) என்.அண்ணாதுரை, சட்ட அலுவலர் அமுல்ராஜ், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், செயற்பொறியாளர்கள் வி.பார்வதி, ஆர்.சசிப்பிரியா, மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், கணக்கு அலுவலர் டி.லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு) மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.