நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காய்கறி மார்கெட் பகுதியில் காட்டெருமை புகுந்ததால் அச்சமடைந்துள்ள வியாபாரிகள் காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காய்கறி மார்கெட் பகுதியில் காட்டெருமை புகுந்ததால் அச்சமடைந்துள்ள வியாபாரிகள் காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. குறிப்பாக, காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.
மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்குச் செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி, காய்கறி மார்கெட்டில் புகுந்த ஒற்றை காட்டெருமை அங்கிருந்த காய்கறி கூடைகளில் இருந்து காய்கறிகளை பாெருமையாக உண்டு சென்றது. அப்போது குச்சியால் விரட்ட முயன்ற காய்கறி கடைக்காரரை தாக்கவும் முயன்றதன் காரணமாக சிலர் தங்களது காய்கறி கடைளை மூட துவங்கினர். சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை பின்பு அங்கிருந்து சென்றது.
பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இந்த ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.