கோவை: கோவை அடுத்த மதுக்கரையில் மனித - வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை அடுத்த மதுக்கரையில் மனித - வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு புறவழிச்சாலை கோவை - கரூர் புறவழிச்சாலை, கோவை வட்டச்சாலை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களைத் தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.