திருப்பூர் ஸ்டேட் பேங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

திருப்பூர்: திருப்பூர் அருகே வங்கியின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே வங்கியின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலை கள்ளிப்பாளையத்தில் ஸ்டேட் பேங்க் வங்கியின் கிளை வங்கியானது செயல்பட்டு வருகிறது. இதனிடையே சனிக்கிழமை வங்கி பணிகளை முடித்துவிட்டு வங்கியை பூட்டி சென்ற அதிகாரிகள் இன்று காலை வங்கியின் உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் உடைக்கப்பட்டு, வங்கியில் உள்ள லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தது. 



இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வங்கி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மிட்டல்‌ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், வங்கியில் கொள்ளை போன பணம் மற்றும் நகை மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...