இளைஞர் எழுச்சி நாளையொட்டி மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் - கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை: இளைஞர் எழுச்சி நாளையொட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு கோவை மாநகர கிழக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: இளைஞர் எழுச்சி நாளையொட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு கோவை மாநகர கிழக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இளைஞர் எழுச்சி நாளையொட்டி, மார்ச் 1ம் தேதியிலிருந்து, அந்த மாதம் முழுவதும், மாவட்டம் முழுவதும், நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும், உள்ளாட்சித்துறையில் பணி ஒப்பந்தங்கள், டெண்டர்களை தனது நெருக்கமானவர்களுக்கு வழங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியை கண்டிப்பதோடு மட்டுமின்றி, கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், பல்வேறு துறைகளில் உள்ள ஊழல் முறைகேடுகளையும் கண்டித்து 11-3-20 அன்று டவுன்ஹாலில் உள்ள கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மேலும், மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் எஸ்பி.வேலுமணியின் சகோதரர் எஸ்பி.அன்பரசன் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், வார்டு வாரியாக குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பது, குண்டும் குழியுமான சாலையை சரி செய்யாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...