கோவை: மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடாது செயல்படும் அறுசுவை அன்னதான திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.
கோவை: மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடாது செயல்படும் அறுசுவை அன்னதான திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அம்மா பேரவை அ.தி.மு.க சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஒருநாள் மட்டும் 24 மணிநேரமும் செயல்படும் அறுசுவை உணவு இடைவிடாத அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் இன்று காலை முதலே பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இட்லி, கிச்சடி, கேசரி, வடை, அரிசி சாதம் போன்ற அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. காலை, மதியம், இரவு என அன்னதான தொடர்ந்து இடைவிடாது வழங்கப்படுகிறது.
இந்த அன்னதான திட்டத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் அம்மா பேரவை கோவை மாவட்ட செயலாளர் நாசர் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் பங்கேற்று உணவருந்தினர்.

முன்னதாக அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேட்டுப்பாளையம் - உதகை முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அம்மா பேரவை அ.தி.மு.க சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஒருநாள் மட்டும் 24 மணிநேரமும் செயல்படும் அறுசுவை உணவு இடைவிடாத அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் இன்று காலை முதலே பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இட்லி, கிச்சடி, கேசரி, வடை, அரிசி சாதம் போன்ற அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. காலை, மதியம், இரவு என அன்னதான தொடர்ந்து இடைவிடாது வழங்கப்படுகிறது.
இந்த அன்னதான திட்டத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் அம்மா பேரவை கோவை மாவட்ட செயலாளர் நாசர் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் பங்கேற்று உணவருந்தினர்.

முன்னதாக அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேட்டுப்பாளையம் - உதகை முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..