திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து நடத்துனருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து நடத்துனருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் நடத்துனர் பின்னால் செல்லக்கூறியும் எதுவும் கேட்காமல் பெண்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே நின்று வந்ததாகவும், இதனால் நடத்துனருக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது, பொதுமக்கள் நடத்துனருக்கு ஆதரவாக அந்த இளைஞரை பிடித்து அடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் பிடித்துக் கொடுத்தனர். இதையடுத்து வீரபாண்டி போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் நடத்துனர் பின்னால் செல்லக்கூறியும் எதுவும் கேட்காமல் பெண்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே நின்று வந்ததாகவும், இதனால் நடத்துனருக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது, பொதுமக்கள் நடத்துனருக்கு ஆதரவாக அந்த இளைஞரை பிடித்து அடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் பிடித்துக் கொடுத்தனர். இதையடுத்து வீரபாண்டி போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.