கோவையில் விதிமுறைகளை மீறி பேருந்துகளை ஓட்டும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை: கோயம்புத்தூரை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் என பல இயங்கிவருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் பேருந்துகள் இங்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.


கோவை: கோயம்புத்தூரை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் என பல இயங்கிவருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் பேருந்துகள் இங்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட அரசு நகர பேருந்துகளும், 200க்கும் மேற்பட்ட தனியார்‌ பேருந்துகளும்‌ பல்வேறு வழித்தடத்தில்‌ இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால் இப்பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மக்களின் வாழ்க்கையினை சிறிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பணிகளுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்பதால் பயணிகள் அதிகளவில் தனியார் பேருந்தினை தேர்வு செய்கின்றனர். இப்பேருந்துகளை பெரும்பாலும் இளைஞர்கள் இயக்கிவருவதால் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. நகரத்தில் அதிவேகமாக பேருந்தினை இயக்கும் போது விபத்துகளும் ஏற்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் டிரிப்பினை முடிக்க வேண்டும் என்பதற்காக முந்திமோதிக்கொண்டு வாகனத்தினை ஓட்டுகின்றனர். குறிப்பாக பெண்களை முன் இருக்கையில் அமர வைத்தும், செல்போன்களில் பேசி கொண்டு வாகனத்தை கவனக்குறைவோடு இயக்குவதால் பயணிகள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். 

பேருந்து ஓட்டுநர்களின் நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் புகார் அளித்தாலும், வருமானம் ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு பிரச்சனையை கண்டுகொள்வதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறி யும் செல்போனில் பேசியபடி வாகனத்தினை இயக்கும் ஓட்டுநர்கள் மீது புகார் தெரிவிக்க பயணிகளுக்கு வசதியாக, போக்குவரத்து அலுவலர்‌ செல்போன்‌ எண்‌ மற்றும்‌ காவல்துறை உதவி எண்‌ பேருந்தின்‌ உள்பகுதியில்‌ எழுதி வைக்க வேண்டும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தபட்ட ஓட்டுனர்‌ உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும். 

மேலும் சென்னையில்‌ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளவாறு பேருந்தின்‌ இடதுபுறமுள்ள இருக்கைகள்‌ பெண்களுக்கும்‌ ஓட்டுனரின்‌ இடதுபுறம்‌ மற்றும்‌ ஓட்டுனரின்‌ இருக்கைக்கு பின்புறம்‌ ஆண்கள்‌ அமரும்‌ வகையில்‌ மாற்றியமைக்க கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...