இந்திய குடியுரிமை சட்டம் பற்றி மத்திய அரசிடம் தெளிவான விளக்கம் இல்லை. ஏர்வாடியில் உள்ள பைத்தியக்காரர்கள் கூட பாஜக அரசு போல் செய்ய மாட்டார்கள் - கோவையில் சீமான் பேச்சு

கோவை: மத்திய அரசிற்கு தெளிவான விளக்கம எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.


கோவை: மத்திய அரசிற்கு தெளிவான விளக்கம எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. 



இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் 4 வதுநாளாக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் போராட்ட களத்தில் பேசிய சீமான், இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொல்லியிருந்தார். 

இதற்கு வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது தான் முதலில் வழக்கு போட்டு விட்டு அப்புறம் என் மீது போடட்டும் என தெரிவித்தார். இந்தியர்கள் யார் என கூட தெரியாமல் 72 ஆண்டுகளாக பல அரசுகள் ஆட்சி நடந்திவருவதால் தான் குடியுரிமை சட்டத்தினை கொண்டு வருகின்றனர் என கோவையில் சிஏஏக்கு எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேச்சு.

மேலும் இந்திய குடிமகன் என்பதற்கு எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்கின்றனர். ஏர்வாடியில் உள்ள பைத்தியக்காரன் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் என பாஜக அரசினை விமர்சனம் செய்தார். போராட்டத்தின் மூலம் நாட்டை இப்படி பதட்டமாக வைத்திருப்பதால் தான் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி தனியாரிடம் விற்பனைக்கு வந்ததைப்பற்றி கூட யாரும் பேச வில்லை என கூறினார்.



குடியுரிமை சட்ட திருத்தம் என்பது இஸ்லாமியர் மக்களுக்கு எதிரானது அல்ல ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் . பிரதமர் மோடி, அமித்ஷா,மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் குடியுரிமை சான்றிதழை காட்ட சொல்லி இனி போராட வேண்டும் என கூறிய சீமான் இவர்களை போல பிராடுகாரர்கள் யாரும் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கின்றார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வரவில்லை என்றாலும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றோம். அது போலவே சி.ஏ.ஏ வந்தால் பாதிப்பு என்பதால் தான் அதனை எதிர்கின்றோம் என்று சீமான் கூறினார். தமிழர்கள்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றனர். இங்கு யாரும் முகலாயர்களின் வாரிசுகள் அல்ல என தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் பலர் உயர் பதவி வகிக்கின்றனர் என குற்றம் சாட்டினார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் நாம் தமிழர் தான் எதிரியாக இருக்கிறது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...