கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமங்களில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமங்களில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் அந்த கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாமல் இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜந்து ஆடுகள் ஒரு பசுமாடு என தொடர்ந்து வேட்டையாடி வரும் அந்த சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறை உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில், சிட்டேப்பாளையம் கிராமத்தில் நுழைந்த அந்த சிறுத்தைப்புலி, பசு, ஆடுகள், வளர்ப்பு நாய்கள் என வேட்டையாடி கொன்றது.
இந்தநிலையில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் சிட்டேப்பாளையம் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கபட்டுள்ளன. ஆனாலும், இந்த கூண்டுகளில் சிக்காத சிறுத்தை அதன் அருகே உள்ள இடுகம்பாளையம், ஆத்திகுட்டை கிராமத்தில் நுழைந்து இன்று இரண்டு ஆடுகளை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்திகுட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது ஆட்டினை இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த சிறுத்தை புலி அதனை அடித்து கொன்றது.
இதேபோல், நேற்று இரவு இடுகம்பாளையம் பெருமாள் கோவில் பகுதியில் நாச்சிமுத்து என்பவரது ஆட்டினையும் சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.
இதுவரை இரவு நேரங்களில் வந்த சிறுத்தை தற்போது பகலிலேயே கால்நடைகளை வேட்டையாடிவதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கிராமங்களை நோக்கி நகரும் இந்த சிறுத்தை மனித உயிர்களை காவு வாங்கும் முன் வனத்துறை சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் அந்த கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாமல் இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜந்து ஆடுகள் ஒரு பசுமாடு என தொடர்ந்து வேட்டையாடி வரும் அந்த சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறை உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில், சிட்டேப்பாளையம் கிராமத்தில் நுழைந்த அந்த சிறுத்தைப்புலி, பசு, ஆடுகள், வளர்ப்பு நாய்கள் என வேட்டையாடி கொன்றது.
இந்தநிலையில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் சிட்டேப்பாளையம் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கபட்டுள்ளன. ஆனாலும், இந்த கூண்டுகளில் சிக்காத சிறுத்தை அதன் அருகே உள்ள இடுகம்பாளையம், ஆத்திகுட்டை கிராமத்தில் நுழைந்து இன்று இரண்டு ஆடுகளை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்திகுட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது ஆட்டினை இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த சிறுத்தை புலி அதனை அடித்து கொன்றது.
இதேபோல், நேற்று இரவு இடுகம்பாளையம் பெருமாள் கோவில் பகுதியில் நாச்சிமுத்து என்பவரது ஆட்டினையும் சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.
இதுவரை இரவு நேரங்களில் வந்த சிறுத்தை தற்போது பகலிலேயே கால்நடைகளை வேட்டையாடிவதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கிராமங்களை நோக்கி நகரும் இந்த சிறுத்தை மனித உயிர்களை காவு வாங்கும் முன் வனத்துறை சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.