திருப்பூர்: அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் பலியானதற்கு காரணமான லாரி ஓட்டுனர் ஹேமராஜ்ஜை போலீசார் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் பலியானதற்கு காரணமான லாரி ஓட்டுனர் ஹேமராஜ்ஜை போலீசார் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நேற்று பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கேரளாவிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலை விபத்திற்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று அவரை திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நேற்று பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கேரளாவிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலை விபத்திற்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று அவரை திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.