கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டுயானைகள் கூட்டம் விவசாய விளைநிலங்களில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டுயானைகள் கூட்டம் விவசாய விளைநிலங்களில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தோலம்பாளையத்தில் உள்ள மேல்பாவி வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் அங்கிருந்த சரஸ்வதி என்பவரது தென்னை தோப்பில் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

சுமார் நான்கு ஆண்டுகள் வரை வளர்ந்து பலன் தரக்கூடிய அளவில் இருந்த தென்னை மரங்களையும், அதன் குருத்து பகுதிகளை பிடுங்கி சேதப்படுத்தியதால் அந்த மரங்கள் மேலும் வளர முடியாது. எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் ஜந்து லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரங்கராஜ், பழனிச்சாமி என நான்குக்கும் மேற்பட்ட தோட்டங்களில் நுழைந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் காட்டுயானைகள் நாசம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினர்.
தோலம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் தற்போது காட்டுயானைகள் நுழைவது அதிகரித்து வருவதாக கூறிய பாதிக்கப்பட்ட விவசாயிகள், இதனை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டினை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தோலம்பாளையத்தில் உள்ள மேல்பாவி வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் அங்கிருந்த சரஸ்வதி என்பவரது தென்னை தோப்பில் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

சுமார் நான்கு ஆண்டுகள் வரை வளர்ந்து பலன் தரக்கூடிய அளவில் இருந்த தென்னை மரங்களையும், அதன் குருத்து பகுதிகளை பிடுங்கி சேதப்படுத்தியதால் அந்த மரங்கள் மேலும் வளர முடியாது. எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் ஜந்து லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரங்கராஜ், பழனிச்சாமி என நான்குக்கும் மேற்பட்ட தோட்டங்களில் நுழைந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் காட்டுயானைகள் நாசம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினர்.
தோலம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் தற்போது காட்டுயானைகள் நுழைவது அதிகரித்து வருவதாக கூறிய பாதிக்கப்பட்ட விவசாயிகள், இதனை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டினை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.