கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை புதுப்பித்து தரக் கோரி தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை புதுப்பித்து தரக் கோரி தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தையற்கடைகள் உள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி மழைக்காலங்களில் ஒழுகுவதோடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ் அவர்களை தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மார்க்கெட் பகுதி கடைகளை பராமரித்து தரும்படியும் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டி தங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, வால்பாறை தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் முனுசாமி, செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் ஜான்சன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தையற்கடைகள் உள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி மழைக்காலங்களில் ஒழுகுவதோடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ் அவர்களை தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மார்க்கெட் பகுதி கடைகளை பராமரித்து தரும்படியும் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டி தங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, வால்பாறை தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் முனுசாமி, செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் ஜான்சன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.