கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு ஏல விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி, தாளவாடி, கோலார், ஆசன், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மையங்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டுவரபட்டு தரம் பிரிக்கபட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு ஏல விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி, தாளவாடி, கோலார், ஆசன், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மையங்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டுவரபட்டு தரம் பிரிக்கபட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது உருளைக்கிழங்கின் விலை கடுமையாக குறைந்து வருவதால் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரியில் உருளைக்கிழங்கின் விவசாயம் தற்போது சீசன் குறைவு என்பதால் மீதமுள்ள உருளைக்கிழங்கிற்கு இடை சீசனில் நல்ல விலை கிடைக்கும், ஆனால் தற்போது நீலகிரி உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. உரம், களையெடுப்பு, மருந்துகள் என பல்வேறு பராமரிப்பில் விளைவிக்க கூடிய உருளைக்கிழங்கிற்கு தற்போதைய விலை விவசாயம் மேற்கொண்ட கூலிக்கு கூட கட்டாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விலை குறைவுக்கு கோலார், குஜராத் போன்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமான உருளை விளைச்சல் காரணம் என்று தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை விளைந்த கிழங்குகளை இதுவரை குளிர்பத கூடத்தில் இருப்பு வைத்தே இந்த வகை கிழங்குகள் விற்பனைக்கு வரும் ஆனால் இந்தாண்டு அறுவடை முடிந்தவுடன் நேரடியாக விற்பனைக்கு வந்ததால், ஏல மையத்திற்கு வரத்து அதிகரித்துள்ளதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி (45 கிலோ மூட்டை) நீலகிரி உருளைக்கிங்கின் விலை 1000 ரூபாய்கு விற்பனையாகிறது. கோலார் கிழங்கு 600 முதல் 700 ரூபாய்க்கும், குஜராத் கிழங்கு 700 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது உருளைக்கிழங்கின் விலை கடுமையாக குறைந்து வருவதால் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரியில் உருளைக்கிழங்கின் விவசாயம் தற்போது சீசன் குறைவு என்பதால் மீதமுள்ள உருளைக்கிழங்கிற்கு இடை சீசனில் நல்ல விலை கிடைக்கும், ஆனால் தற்போது நீலகிரி உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. உரம், களையெடுப்பு, மருந்துகள் என பல்வேறு பராமரிப்பில் விளைவிக்க கூடிய உருளைக்கிழங்கிற்கு தற்போதைய விலை விவசாயம் மேற்கொண்ட கூலிக்கு கூட கட்டாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விலை குறைவுக்கு கோலார், குஜராத் போன்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமான உருளை விளைச்சல் காரணம் என்று தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை விளைந்த கிழங்குகளை இதுவரை குளிர்பத கூடத்தில் இருப்பு வைத்தே இந்த வகை கிழங்குகள் விற்பனைக்கு வரும் ஆனால் இந்தாண்டு அறுவடை முடிந்தவுடன் நேரடியாக விற்பனைக்கு வந்ததால், ஏல மையத்திற்கு வரத்து அதிகரித்துள்ளதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி (45 கிலோ மூட்டை) நீலகிரி உருளைக்கிங்கின் விலை 1000 ரூபாய்கு விற்பனையாகிறது. கோலார் கிழங்கு 600 முதல் 700 ரூபாய்க்கும், குஜராத் கிழங்கு 700 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.