நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜரான நிலையில் 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜரான நிலையில் 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை மற்றும் அங்கு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்த விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜம்சிர் அலி தவிர 9 பேர் ஆஜராகினர். அப்போது, இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை மற்றும் அங்கு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்த விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜம்சிர் அலி தவிர 9 பேர் ஆஜராகினர். அப்போது, இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.