கோவையில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த திருமணம்..! மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சட்டம் வேண்டாம் என மணமக்கள் கோரிக்கை!

கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்ட மைதானத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சி.ஏ.ஏ,என். ஆர்.சி போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்கள் வேண்டாம் என கோஷம் எழுப்பினர்.

கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்ட மைதானத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சி.ஏ.ஏ,என். ஆர்.சி போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்கள் வேண்டாம் என கோஷம் எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று(பிப்., 19) காலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் துவங்கியது.



இந்த போராட்டமானது தற்போது வரை முழக்கங்களுடன் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் வயது முதியவர்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், போராட்ட திடலில் அப்துல்கலாம் மற்றும் ரேஷ்மா தம்பதியினர் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர். 



மேலும், திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதோடு, மக்களை பிரிக்கும் சட்டங்களான என்.ஆர். சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் போன்றவற்றை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...