கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவை ஆத்துபாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவை ஆத்துபாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று (19-02-2020) காலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு மேல் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் துவங்கியது.

இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது:-
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளார்கள். இதற்கு பிராய்ச்சித்தமாக மற்ற மாநிலங்களை போல நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டதிருத்தத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று (19-02-2020) காலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு மேல் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் துவங்கியது.

இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது:-
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளார்கள். இதற்கு பிராய்ச்சித்தமாக மற்ற மாநிலங்களை போல நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டதிருத்தத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.