கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அட்டகட்டி மையத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அட்டகட்டி மையத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழை பொய்த்த நிலையில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து வருகின்றன. மேலும் சாலைகளின் ஓரங்களில் மரங்களின் காய்ந்த இலைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் மூலம் பீடி, சிகரெட்டால் தீ பிடித்து வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் அபாயம் உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக சாலைகளில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதுடன் வனப்பகுதிக்கும் சாலைகளுக்கும் இடையேயும் தேயிலை தோட்ட பகுதிகளுக்கும் இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் வனத்துறையினருக்கு தீ ஏற்படாமல் தடுக்கும் வழி, தீ ஏற்பட்டபின் தடுக்கும் முறை மற்றும் தீயை கட்டுப்படுத்தி அணைப்பது பற்றிய பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப, கள இயக்குநரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், உதவி வனபாதுகாவலர் செல்வம், பயிற்சி மைய அலுவலர் நவீன், வால்பாறை மானாம் பள்ளி, டாப்சிலிப், உலாந்தி மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர், இங்குள்ள வனச்சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழை பொய்த்த நிலையில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து வருகின்றன. மேலும் சாலைகளின் ஓரங்களில் மரங்களின் காய்ந்த இலைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் மூலம் பீடி, சிகரெட்டால் தீ பிடித்து வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் அபாயம் உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக சாலைகளில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதுடன் வனப்பகுதிக்கும் சாலைகளுக்கும் இடையேயும் தேயிலை தோட்ட பகுதிகளுக்கும் இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் வனத்துறையினருக்கு தீ ஏற்படாமல் தடுக்கும் வழி, தீ ஏற்பட்டபின் தடுக்கும் முறை மற்றும் தீயை கட்டுப்படுத்தி அணைப்பது பற்றிய பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப, கள இயக்குநரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், உதவி வனபாதுகாவலர் செல்வம், பயிற்சி மைய அலுவலர் நவீன், வால்பாறை மானாம் பள்ளி, டாப்சிலிப், உலாந்தி மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர், இங்குள்ள வனச்சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர்.