திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR, NCR உள்ளிட்டவற்றை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பினர் தென்னம்பாளையும் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், போராட்டத்தின் முடிவாக மக்கள் தொகை கணக்கெடுப்பினை பழைய நடைமுறையிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR, NCR உள்ளிட்டவற்றை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பினர் தென்னம்பாளையும் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், போராட்டத்தின் முடிவாக மக்கள் தொகை கணக்கெடுப்பினை பழைய நடைமுறையிலேயே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.