கோவை: கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர்புகை வண்டியுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர்புகை வண்டியுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் மாநகரை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோவை ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த இஸ்லாமிய அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடியுள்ளனர். இதையடுத்து சிஏஏவை திரும்பப் பெற வேண்டும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதன் பாதுகாப்பு பணிகளுக்காக கண்ணீர்புகை வண்டியுடன், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் அறிவிப்பையடுத்து அரசுப்பணிகள் முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் மாநகரை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோவை ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த இஸ்லாமிய அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடியுள்ளனர். இதையடுத்து சிஏஏவை திரும்பப் பெற வேண்டும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதன் பாதுகாப்பு பணிகளுக்காக கண்ணீர்புகை வண்டியுடன், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் அறிவிப்பையடுத்து அரசுப்பணிகள் முடக்கப்பட்டுள்ளது.