நிலகிரி: தனியார் தோட்டத்தை ஒட்டி வனப்பகுதியில் இறந்த குட்டி யானையை நெருங்க விடாமல் தாய் யானை அருகிலேயே நிற்பதால் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதமாகி உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலகிரி: தனியார் தோட்டத்தை ஒட்டி வனப்பகுதியில் இறந்த குட்டி யானையை நெருங்க விடாமல் தாய் யானை அருகிலேயே நிற்பதால் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதமாகி உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாய் யானை தானாக அங்கிருந்து செல்லும்வரை பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை ஒத்திவைத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொச்சுகுன்னு தனியார் எஸ்டேட் பகுதியை ஓட்டி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன் இறந்துள்ளது.
யானைக் கூட்டம் அப்பகுதியிலேயே நிற்பது குறித்து தோட்ட நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தகவல் அறிந்து நேற்று மாலை அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் மூன்று யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர்.
அருகில் நெருங்க முயன்றபோது அங்கிருந்த தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் விரட்டியதாலும் இருட்ட துவங்கியதாலும், பின் வாங்கிய வனத்துறையினர் இன்று காலை முதல் யானைகளை கண்காணித்து இறந்த குட்டியை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால், இன்றும் தாய் யானை குட்டியின் அருகிலேயே நிற்பதால் குட்டியை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தூரத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றால் அது மேலும் ஆக்ரோஷம் அடையக்கூடிய சூழல் ஏற்படக்கூடும் என்பதாலும், யானை இறந்து கிடக்கும் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை குட்டியின் அருகில் செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல கூடாது என்றும் பொதுமக்கள் யாரும் யானை நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சேரம்பாடி பகுதியில் இதேபோல் வனத்துறையினர் இறந்த குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது தாய் யானையுடன் வந்த மற்ற யானைகள் ஆக்ரோசமாக வாகனங்களை உடைத்தும் அருகிலுள்ள கோவிலை இடித்தும் சேதப்படுத்தியதால் தற்போது குட்டியிடம் இருந்து தாய் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் மாலை வரை ஈடுபட்ட வனத்துறையினர், பின்னர் திரும்பிச் சென்றனர்.
மேலும், தாய் யானை தானாக அங்கிருந்து செல்லும்வரை பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை ஒத்திவைத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொச்சுகுன்னு தனியார் எஸ்டேட் பகுதியை ஓட்டி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன் இறந்துள்ளது.
யானைக் கூட்டம் அப்பகுதியிலேயே நிற்பது குறித்து தோட்ட நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தகவல் அறிந்து நேற்று மாலை அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் மூன்று யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர்.
அருகில் நெருங்க முயன்றபோது அங்கிருந்த தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் விரட்டியதாலும் இருட்ட துவங்கியதாலும், பின் வாங்கிய வனத்துறையினர் இன்று காலை முதல் யானைகளை கண்காணித்து இறந்த குட்டியை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால், இன்றும் தாய் யானை குட்டியின் அருகிலேயே நிற்பதால் குட்டியை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தூரத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றால் அது மேலும் ஆக்ரோஷம் அடையக்கூடிய சூழல் ஏற்படக்கூடும் என்பதாலும், யானை இறந்து கிடக்கும் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை குட்டியின் அருகில் செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல கூடாது என்றும் பொதுமக்கள் யாரும் யானை நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சேரம்பாடி பகுதியில் இதேபோல் வனத்துறையினர் இறந்த குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது தாய் யானையுடன் வந்த மற்ற யானைகள் ஆக்ரோசமாக வாகனங்களை உடைத்தும் அருகிலுள்ள கோவிலை இடித்தும் சேதப்படுத்தியதால் தற்போது குட்டியிடம் இருந்து தாய் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் மாலை வரை ஈடுபட்ட வனத்துறையினர், பின்னர் திரும்பிச் சென்றனர்.