கோவையில் வரும்‌ 21ம்‌ தேதி பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ களைக்கட்ட தயாராகும்‌ ஈஷா மஹாசிவராத்திரி!

கோவை: இந்தியா மற்றும்‌ லெபனான்‌ நாட்டைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா விடிய விடிய களைக்கட்ட தயாராக உள்ளது.

கோவை: இந்தியா மற்றும்‌ லெபனான்‌ நாட்டைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா விடிய விடிய களைக்கட்ட தயாராக உள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தின்‌ 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும்‌ 21-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில்‌ நடக்கும்‌ இவ்விழாவில்‌ தமிழகம்‌ மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ நேரில்‌ பங்கேற்க உள்ளனர்‌.

இவ்விழாவில்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப் புற இசை கலைஞரும்‌ சூது கவ்வும்‌, ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர்‌ சங்கம்‌, பேட்ட உள்ளிட்ட படங்களில்‌ பாடல்களை பாடியுள்ள அந்தோணி தாசன்‌, தமிழ்‌, தெலுங்கு, மலையாளம்‌, கன்னடம்‌ உள்ளிட்ட மொழிகளில்‌ ஏராளமான பாடல்கள்‌ பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர்‌ கார்த்திக்‌ ஆகியோர்‌ பங்கேற்று தமிழ்‌ பாடல்களை பாட உள்ளனர்‌. மேலும்‌, குஜராத்தைச்‌ சேர்ந்த பிரபல பின்னணி பாடகர்‌ இரு.பார்த்தீவ்‌ கோஹில்‌ மற்றும்‌ இரு.ஆதித்யா கத்வியும்‌ தங்கள்‌ இசையால்‌ மக்களை கவர உள்ளனர்‌.

இதுதவிர, புகழ்பெற்ற இந்திய கவிஞரான கபீரின்‌ பெயரில்‌ இசை குழுவை உருவாக்கி நாட்டுப்புறப் பாடல்களை பாம்‌ வரும்‌ ' கபீர்‌ கஃபே' குழுவினரும்‌, லெபனானைச்‌ சேர்ந்த டிரம்ஸ்‌ கலைஞர்களும்‌ மக்களை உற்சாக வெள்ளத்தில்‌ ஆழ்த்த உள்ளனர்‌. தியான லிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்சபூத ஆராதனாவுடன்‌ தொடங்கும்‌ விழா லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணை கவரும்‌ ஆதியோகி இவய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்‌ விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள்‌ மற்றும்‌ சர்ப்ப சூத்திரம்‌ பிரசாதமாக வழங்கப்படும்‌. விழாவில்‌ பங்கேற்கும்‌ லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும்‌ வழங்கப்பட உள்ளது. மஹாசிவராத்திரி விழாவில்‌ கலந்துகொள்வதற்காக தமிழகம்‌ முழுவதும்‌ அந்தந்த மாவட்டங்களில்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ மூலம்‌ பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, விழா நாட்களில்‌ கோவையில்‌ இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம்‌. அனைவரும்‌ வருக.

கூடுதல்‌ தகவல்களுக்கு:tamil.sadhguru.org/MSR, 83000 83111

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...