திருப்பூர்: கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
திருப்பூர்: கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் பேரணி நடைபெற்றது.

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கையை கைவிட்டு இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி மாநகராட்சி அருகே நிறைவடைந்தது.
இந்த பேரணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.