கோவை: தமிழக சட்டமன்றத்தில் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ.,க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை கரும்புக்கடை,உக்கடம் போன்ற இஸ்லாமியர்கள் வாழும் குடியிருப்பு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.
கோவை: தமிழக சட்டமன்றத்தில் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ.,க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை கரும்புக்கடை,உக்கடம் போன்ற இஸ்லாமியர்கள் வாழும் குடியிருப்பு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது. இந்தக் கோரிக்கையின் தொடர்ச்சியாக இன்று கோவை உக்கடம், கரும்புகடை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளின் முன்பாக தேசிய கொடியினை ஏற்றி இஸ்லாமியர்கள் தேசத்தின் பூர்வகுடிகள்தான் என்பதை அரசுக்கு உணர்த்த உள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினரான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.