கோத்தகிரியில் புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வழக்கு; தப்பியோடிய புலியை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம்

நீலகிரி: கோத்தகிரி அருகே புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய புலியினை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

நீலகிரி: கோத்தகிரி அருகே புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய புலியினை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே விவசாயிகள் சுருக்கு கம்பிகள் வைப்பது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்றின் வலது கால் சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, புலி தனது வலது காலை கம்பியில் இருந்து விலக்கிக்கொண்டு தப்பி ஓடியது. வனத்துறையினர் புலிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்குமா என்று புலியை வனப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். 



புலி அகப்படாததை அடுத்து, மூன்று இடங்களில் கேமராவை வைத்து அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் அதிலும் புலி சிக்காததால் வனத்துறையினர் அங்கு ட்ரோன் கேமரா மூலம் இன்று மாலை புலியினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி குருசாமி தபலா கூறும்போது, 'அந்த பகுதியில் இரண்டு புலிகளை பார்த்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் எப்படி உள்ளது, அதற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா வனப்பகுதியில் ஏதாவது புலிகளுக்கு இடையூறு உள்ளதா என்பது குறித்து ஆராய ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். மேலும் புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் நஞ்சுண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...