கோவையில் 5ம் வகுப்பு மாணவியை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு

கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் தலித் மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் தலித் மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் தாய் மகேஸ்வரி கூறுகையில், 'எனது மூத்த மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக எனது மகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் அழுதபடியே உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் அவளிடம் விசாரித்த போது, பிப்ரவரி 11ம் தேதி பள்ளியில் உள்ள கழிவறையை தலைமை ஆசிரியர் குமரேஸ்வரி சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக கழிவறையை சுத்தம் செய்து வருவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.



இதனையடுத்து, தானும் பெற்றோர்கள் சிலரும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததாகவும் ஆனால், அதற்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என என்றார். மேலும், இந்த ஆசிரியர் தனது மகள் உட்பட பலரை சாதி ரீதியாக திட்டியுள்ளதாக கூறிய அவர், தனது மகளை மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும் இதனால் தனது மகள் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் சாதியின் பெயரால் அவமானப்படுத்திய தலைமை ஆசிரியை குமரேஸ்வரி மீது பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளதாக கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...