கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் த.மு.மு.க சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் த.மு.மு.க சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை ஆனைமலை மஸ்ஜித் தலைவர் அபுதுல் காதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சி.ஏ.ஏ.சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னை சம்பவத்தை நடத்திய காவல்துறை தமிழக அரசு மத்திய அரசினை கண்டித்து கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆண்கள் பெண்கள், குழந்தைகள், நோ சி.ஏ.ஏ. என்ற பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க செபீர், அலி, தி.மு.க சார்பில் நகர செயலாளர் பால்பாண்டி, எல்.பி.எப் தலைவர் சௌந்திரபாண்டியன், கம்யூனிஸ்ட் மோகன் மாணிக்கம், பெரியசாமி ,விடுதலை சிறுத்தை வீரமணி, அ.ம,மு,க குஞ்சாலி, பாபுஜி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
காவல் ஆய்வாளர், பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை ஆனைமலை மஸ்ஜித் தலைவர் அபுதுல் காதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சி.ஏ.ஏ.சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னை சம்பவத்தை நடத்திய காவல்துறை தமிழக அரசு மத்திய அரசினை கண்டித்து கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆண்கள் பெண்கள், குழந்தைகள், நோ சி.ஏ.ஏ. என்ற பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க செபீர், அலி, தி.மு.க சார்பில் நகர செயலாளர் பால்பாண்டி, எல்.பி.எப் தலைவர் சௌந்திரபாண்டியன், கம்யூனிஸ்ட் மோகன் மாணிக்கம், பெரியசாமி ,விடுதலை சிறுத்தை வீரமணி, அ.ம,மு,க குஞ்சாலி, பாபுஜி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
காவல் ஆய்வாளர், பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.