திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளரின் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளரின் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
திருப்பூரில் தொடர்ந்து நடைபெறும் மர்மத் தீ விபத்துக்களை போலீசார் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.
திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் இவர் இந்து முன்னணியின் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மணியாரம்பாளையத்தில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி மற்றும் கணினிகளும் தீயில் எரிந்து உள்ளதால் அவற்றை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் ஒருவாரத்திற்குள்ளாக இரு வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம தீ விபத்துகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூரில் தொடர்ந்து நடைபெறும் மர்மத் தீ விபத்துக்களை போலீசார் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.
திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் இவர் இந்து முன்னணியின் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மணியாரம்பாளையத்தில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி மற்றும் கணினிகளும் தீயில் எரிந்து உள்ளதால் அவற்றை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் ஒருவாரத்திற்குள்ளாக இரு வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம தீ விபத்துகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.