நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுறுக்கு கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுறுக்கு கம்பியில்மாட்டிக் கொண்டது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
வன மருத்துவர் காேவையில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் பாதுகாத்தனர்.

அதையடுத்து, கோவையிலிருந்து வன மருத்துவர் மனோகரன் மாலை கோத்தகிரி வந்த பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து காெண்டிருக்கும் பாேதே புலியின் காலில் இருந்த சுறுக்கு கம்பி கழன்றதால் அது தானாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றத.
இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுறுக்கு கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுறுக்கு கம்பியில்மாட்டிக் கொண்டது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
வன மருத்துவர் காேவையில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் பாதுகாத்தனர்.

அதையடுத்து, கோவையிலிருந்து வன மருத்துவர் மனோகரன் மாலை கோத்தகிரி வந்த பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து காெண்டிருக்கும் பாேதே புலியின் காலில் இருந்த சுறுக்கு கம்பி கழன்றதால் அது தானாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றத.
இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.