கோவை: எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லை மற்றும் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லை மற்றும் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் கஞ்சா கடத்தி வந்து கோவையில் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை மருந்து தடவிய வில்லைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு வின்சென்ட்க்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட தனிப்படையினர் கோவை மயிலேரிபாளையம் கல்லூரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்களிடம் எல்.எஸ்.டி எனும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது, கோவையைச் சேர்ந்த ஷாஜி மகன் பிலால் (22), ஹரிபிரசாத் மகன் அர்ஜூன் பிரசாத் (22), மற்றும் கங்காதரன் மகன் சாரங் (22), என்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் கஞ்சா கடத்தி வந்து கோவையில் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை மருந்து தடவிய வில்லைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு வின்சென்ட்க்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட தனிப்படையினர் கோவை மயிலேரிபாளையம் கல்லூரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்களிடம் எல்.எஸ்.டி எனும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது, கோவையைச் சேர்ந்த ஷாஜி மகன் பிலால் (22), ஹரிபிரசாத் மகன் அர்ஜூன் பிரசாத் (22), மற்றும் கங்காதரன் மகன் சாரங் (22), என்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.