திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரில் திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக திருப்பூர் காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்த இஸ்லாமியர் கலைந்து சென்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரில் திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக திருப்பூர் காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்த இஸ்லாமியர் கலைந்து சென்றனர்.