கோவை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால், பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் ஆத்துப்பாலம், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது எனவும் இஸ்லாமியர்கள் கோவையில் நடந்த போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பினர்.
இதை தொடர்ந்து போலீசார், உக்கடம், அத்துப்பாலம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.