நம்முடன் வாழ மறுத்து சென்ற முஸ்லீம்களை மீண்டும் அழைத்தால் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை: நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என கோவை குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என கோவை குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் சார்பில் அவினாசிலிங்கம் இரண்டாம் கேட் நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணியானது மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி, காமராஜபுரம் சாலை வழியாக வலதுபுறம் மீண்டும் திரும்பி ஈஸ்ட் டி.வி சாமி சாலை வழியாக தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. 



இந்த பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாகிஸ்தான், பங்களாதேஷ் நம்முடைய பூமி எனவும் 1906ம் ஆண்டு இந்துக்களுடன் எங்களால் வாழ முடியாது என்று முஸ்லீம்கள் பிரிந்து சென்றதாகவும் இந்த நாட்டை துண்டாட வேண்டும் என்று அவர்கள் கூறியதாக குற்றம்சாட்டினார். 



மேலும், துண்டாடப்பட்ட இந்துக்களின் நிலைமையை பற்றி காங்கிரஸ் கவலை பட்டதுண்டா என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், பாகிஸ்தானில் உள்ள இந்துகளை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்ன ஒரே தலைவன் டாக்டர் அம்பேத்கர் என்று பேசினார்.

1947ம் ஆண்டுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பட்டியிலன மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் ஓட்டுக்காக 1967ம் ஆண்டுக்கு ஆட்சிக்கு வர திமுகவினர் என்ன செய்தார்களோ, அதேபோல் தற்போதும் பிரிவினை வாதம் செய்ய முயற்சிப்பதாக கூறினார்.

மேலும், நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என்றும் 15 சதவீத இஸ்லாமியர்கள் தெருவுக்கு வருவீர்கள் என்றால் 80 சதவீத இந்துக்களும் தெருவுக்கு வருவோம் என்றார். 

பாகிஸ்தான் நமது எதிரி நாடு, அதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் கன்னியாகுமரியில் பயங்கரவாதிகள் வில்சனை கொல்ல வரவில்லை, காவலர்களை கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்று பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கிறீர்கள் என்றால் அது எங்களின் உயிருக்கு உலை வைக்கும் செயல் என்றும் அந்த வேலையை நீதித்துறையும், காவல்துறையும் செய்வதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...