கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ளது சிட்டேபாளையம் கிராமம், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ளது சிட்டேபாளையம் கிராமம், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் சிறுத்தை ஓன்று நுழைந்து விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கபட்டிருந்த முருகன் என்பவரது பசுமாட்டினை வேட்டையாடி இழுத்து சென்றது. அதையடுத்து, அதே பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நுழைந்த சிறுத்தை சரவணன் என்பவரது வீட்டின் அருகே ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த வெள்ளாடு ஒன்றை கடித்து கொன்றுள்ளது.
பின்னர், இரவு அங்கு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த மற்ற ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது, இதனால் அந்த கிராம மக்களிடம் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து கால்நடைகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து இன்று சிறுமுகை வனத்துறை சார்பில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க முடிவு செய்யபட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டது.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூலம் டிராக்டர் மூலம் எடுத்துவரபட்டு சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடிய பெரியதோட்டம் பகுதியில் இன்று வைக்கப்பட்டது.
பெரிய தோட்டம் தேன்கல் கரடு பகுதியில் ஒரு கூண்டும், அந்த மலை தொடர் அமைந்துள்ள பால்காரன் சாலை பகுதியில் மற்றொரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூண்டுகளில் நாய்கள் வைக்கபட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்துபேசிய வனத்துறை அலுவலர் மனோகரன் கிராமத்தில் நுழையும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கபட்டுள்ளதுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் இந்த கிராமத்தில் பணியமர்த்தபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவே கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் சிறுத்தை ஓன்று நுழைந்து விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கபட்டிருந்த முருகன் என்பவரது பசுமாட்டினை வேட்டையாடி இழுத்து சென்றது. அதையடுத்து, அதே பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நுழைந்த சிறுத்தை சரவணன் என்பவரது வீட்டின் அருகே ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த வெள்ளாடு ஒன்றை கடித்து கொன்றுள்ளது.
பின்னர், இரவு அங்கு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த மற்ற ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது, இதனால் அந்த கிராம மக்களிடம் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து கால்நடைகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து இன்று சிறுமுகை வனத்துறை சார்பில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க முடிவு செய்யபட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டது.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூலம் டிராக்டர் மூலம் எடுத்துவரபட்டு சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடிய பெரியதோட்டம் பகுதியில் இன்று வைக்கப்பட்டது.
பெரிய தோட்டம் தேன்கல் கரடு பகுதியில் ஒரு கூண்டும், அந்த மலை தொடர் அமைந்துள்ள பால்காரன் சாலை பகுதியில் மற்றொரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூண்டுகளில் நாய்கள் வைக்கபட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்துபேசிய வனத்துறை அலுவலர் மனோகரன் கிராமத்தில் நுழையும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கபட்டுள்ளதுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் இந்த கிராமத்தில் பணியமர்த்தபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவே கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.