மேட்டுப்பாளையத்தில் தொடரும் சிறுத்தை அட்டகாசம்..! மீண்டும் கால்நடைகளை வேட்டையாடியதால் பொதுமக்கள் பீதி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை பசுமாட்டினை வேட்டையாடிய நிலையில் இன்று மீண்டும் ஆடுகளை கடித்து கொன்றதால் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை பசுமாட்டினை வேட்டையாடிய நிலையில் இன்று மீண்டும் ஆடுகளை கடித்து கொன்றதால் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை அருகே உள்ளது சிட்டேபாளையம் கிராமம். கால்நடை வளர்ப்பு அதிகம் கொண்ட இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு இந்த கிராமத்தில் நுழைந்து சிறுத்தை ஓன்று விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த முருகன் என்பவரது பசுமாட்டினை வேட்டையாடி இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டின் அருகே ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடு ஒன்றை சிறுத்தை நுழைந்து கடித்து கொன்றுள்ளது. அப்போது, அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது.

பின்னர் இது குறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த ஆட்டின் உடலை ஆய்வு செய்ததில் சிறுத்தை வேட்டையாடியது உறுதியானது. இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய அந்த கிராம மக்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கே நுழைந்து கால்நடைகளை சிறுத்தை அடுத்தடுத்து வேட்டையாடியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...