சென்னை: சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மானியம் இல்லாத 14.2 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை: சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மானியம் இல்லாத 14.2 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக விலை உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மானியம் இல்லா சிலிண்டரை வாங்கிவிட்டு அரசின் மானியத்திற்காக காத்திருக்கும் சாமானியர் மக்களை இந்த விலை உயர்வு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.