திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிவேகமக செல்லக் கூடாது என்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மாநகர போலீசார் அறிவுறுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிவேகமக செல்லக் கூடாது என்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மாநகர போலீசார் அறிவுறுத்தினர்.
திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுடனான கலந்தாய்வு கூட்டமானது மாநகர துணை ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் உட்பட ஆட்டோ, ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய பத்ரிநாராயணன், மாநகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அதிவேகமாகச் செல்லக் கூடாது எனவும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டுமென்றும், ஆட்டோ ஓட்டுநர்கள் செல்லும் வழியில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தவும், கண்டறியும் நடவடிக்கையாக விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், திருப்பூர் மாநகர காவல் துறை சார்பிலும் உரிமம் பெற்ற ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திருப்பூர் மாநகர பகுதிகளில் 20 சிக்னல்கள் உள்ள நிலையில், ஒரு சில முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து 14 சிக்னல்கள் அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.