திருப்பூர்: திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி
திருப்பூர்: திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி
திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை 45வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் மெயின் வீதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் குடிநீர் சென்று சாக்கடையில் கலந்து வீணாகி வருவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித பயனும் இல்லை என தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலையில் ஓடும் நீரிலேயே குளித்து மற்றும் துணிகளை துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெயில் காலமாகி வரும் சூழ்நிலையில் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மாநகராட்சியின் அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் வீணாகி வருவதாக குற்றம் சாட்டினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் அவினாசி சாலையில் குழாய் உடைந்து வீணாகிய நீரில் சமூக ஆர்வலர் ஒருவர் குளித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து அங்கு உடனடியாக குழாய் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை 45வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் மெயின் வீதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் குடிநீர் சென்று சாக்கடையில் கலந்து வீணாகி வருவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித பயனும் இல்லை என தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலையில் ஓடும் நீரிலேயே குளித்து மற்றும் துணிகளை துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெயில் காலமாகி வரும் சூழ்நிலையில் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மாநகராட்சியின் அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் வீணாகி வருவதாக குற்றம் சாட்டினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் அவினாசி சாலையில் குழாய் உடைந்து வீணாகிய நீரில் சமூக ஆர்வலர் ஒருவர் குளித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து அங்கு உடனடியாக குழாய் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.