கோவையில் இன்று மாபெறும் நீலச்சட்டை பேரணி: அரசியல் கட்சியினர், திரைப்பட இயக்குனர்கள் கலந்துகொள்கின்றனர்

கோவை: கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று, பிப் 9 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில் நீலச்சட்டை பேரணி நடைபெற உள்ளது.


கோவை: கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று, பிப் 9 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில் நீலச்சட்டை பேரணி நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளதாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பேரணியானது அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் துவங்கி மகளிர் பாலிடெக்னிக்கில் நிறைவடைகிறது.

இதைத்தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடானது மாலை 5 மணி அளவில் பாலசுந்தரம் சாலையில் பறை இசையுடன் துவங்க உள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ் ,இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கோபி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...