நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு , கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தைப்பூச தேர் திருவிழாவானது கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை காலை 11:30 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன்,  சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மாவட்ட ஆட்சியர்  காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபட வர உள்ளதால், மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதே போல், கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேர் ஓட்டங்கள் நடைபெற உள்ளதால் மொத்தமாக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

குறிப்பாக மருதமலையில் மலை மேல் செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மலையடி வாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் எளிதாக வந்து செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...