கோவையில் வரும் 10ம் தேதி 150க்கும் மேற்பட்ட கைவினை பொருட்களுடன் பாரம்பரியமான தாம்பாளம் தட்டு கண்காட்சி!

கோவை: கோவை தமிழ்நாடு கைவினை கவுன்சில் சார்பில் கோவை புலியகுளத்தில் வரும் பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதி தென்னிந்தியாவின் பாரம்பரியமான தாம்பாளம் தட்டு கண்காட்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை தமிழ்நாடு கைவினை கவுன்சில் சார்பில் கோவை புலியகுளத்தில் வரும் பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதி தென்னிந்தியாவின் பாரம்பரியமான தாம்பாளம் தட்டு கண்காட்சி நடைபெறுகிறது.

தாம்பாளம் என்பது தென்னிந்தியாவின் பாரம்பரியமாக, பன்னெடுங்காலமாக மறக்க முடியாத ஒன்று. வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், பூக்களைக் கொண்ட தட்டில் வைத்து விழாக்காலங்களில் மட்டுமின்றி, விசேஷ நாட்களிலும் பூஜை செய்கின்றனர்.



இந்நிலையில், தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சார்பில் கோவையில் வரும் 10ம் தேதி மிக பழமையான தாம்பாளம் தட்டுக்களையும் அது பற்றிய ஆவணங்களையும் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சில்வர், பித்தளை, மரம் மற்றும் கற்களால் ஆன தட்டுக்கள் இடம் பெறுகின்றன. பல தனித்துவமிக்க இத்தகைய தாம்பாளம் தட்டுக்களை, பல வீடுகளிலும், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பெற்று காட்சிப்படுத்தவுள்ளது. நமது மண்டலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது காட்சிப்படுத்தப்படும். இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினை பொருட்களும் இடம் பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள கைவினை தட்டுக்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுகிறது.



கோவையில் நடக்கும் இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட கைவினை பொருள்கள் இடம் பெறுகின்றன. நமது பகுதியில் உள்ள உலோகங்கள், பித்தளை, தாமிரம் போன்றவற்றில் உருவாக்கப்பட்ட தாம்பாள தட்டுக்கள் இடம் பெறுகின்றன. காஷ்மீரி கோபியர் மச்சே, வால்நட் மர வேலைப்பாடு, பித்ரி, உலோகத்தின் மீதான பதிவுகள், சித்திரங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. பார்வையாளர்கள் இவற்றை பார்வையிட்டு வாங்கி, பாரம்பரியமிக்க இந்த பொருட்களை பயன்படுத்தலாம்.



கோவை புலியகுளத்தில், கார்மல் தோட்டம் பள்ளிக்கு எதிரே உள்ள கூடம் அரங்கில் இந்த கண்காட்சி வரும் பிப்ரவரி 10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இலவச அனுமதியுடன் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...