கோவை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவில் திடீர் தீ விபத்து!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1700க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், மாவட்டத்தின் முக்கியமான இந்த மருத்துவமனையில் இன்று காலை வெளிநோயாளிகளின் சித்த மருத்துவப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவமனையின் தனியார் காவலர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகே இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் இல்லாததாலும், தனியார் காவலர்கள் அதிவேகமாக வந்து தீயை அணைத்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மருத்துவமனையின் உட்புறத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...