பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரி புகார்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.



முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சரை மாவட்ட ஆட்சியர், புலிகள் காப்பகக் கள இயக்குநர், வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரண்டு பழங்குடியின சிறுவர்களை அழைத்து தனது காலணிகளைக் கழற்றிவிடச் செய்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதேபோல, இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்த நிலையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், மற்றும் திராவிட தமிழர் கட்சி சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீதும், அவரின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து புகார்தாரர்கள் கூறும்போது ;-

அரசியலமைப்பு சட்டத்தின் சரத்துக்கள் தீண்டாமை ஒரு குற்றம் என குறிப்பிடுகிற நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்ற அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துக்களை எதிரானது. ஆகவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...