கோவை: கோவை துடியலூர் பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை பிடிக்க ஐந்து நபர்களின் டி.என்.ஏ ,.வை பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை: கோவை துடியலூர் பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை பிடிக்க ஐந்து நபர்களின் டி.என்.ஏ ,.வை பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை பன்னிமடை பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, 26 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி 8 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் எதிராக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை முடிந்தது.
இந்த நிலையில், நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்காக தூக்குத் தண்டனையும், போக்சோ சட்டம் (5&7)க்கு இயற்கையான மரணம் அடையும் வரைக்கும் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 201க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருப்பையிலிருந்து சேகரிக்கப்பட்ட திரவத்தில் கலப்பு டிஎன்ஏ சுயவிபரம் காணப்படுவதாக ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்.பி சுஜித் குமார், ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி துடியலூர் சிறுமியின் வழக்கு தொடர்பாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதில் அனந்த நாயகி தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிக்க சிறுமியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரின் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது தொடர்பான விசாரணையையடுத்து டி.என்.ஏ சோதனை மூலமாகத்தான் அந்த நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியும் என அறிந்து முதல்கட்டமாக, ஐந்து பேரிடம் டி.என்.ஏ சோதனை செய்ய முடிவெடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இவர்களிடம் நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனைகளின் முடிவில் தான் குற்றவாளி யார் ?என உறுதிப்படுத்த முடியும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.