குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பும் இல்லை; பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக ஸ்டாலின் போராடுகிறார் - முரளிதர ராவ் குற்றச்சாட்டு

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுகிறார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுகிறார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம் என தெரிவித்தார். ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை எனவும் இதனால் இந்தியாவில் வாழும் ஒட்டு மொத்த இந்துக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக கூறினார்.

இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டப்படும் என தெரிவித்த அவர், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பார்ப்பதை தவிர்த்து அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாக உள்ளது என்றும் பாஜக அனைத்து மொழிகளையும் சமமாக பார்ப்பதாகவும் கூறினார்.



குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காகப் போராடுவதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததை வரவேற்பதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சிஏஏ, காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில் குறித்து பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பொருளாதார மந்த நிலை பலமுறை வந்துள்ளது எனவும் பொருளாதார மந்த நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறிய அவர், பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரோ என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனவும் டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார். ஜெயக்குமார் பாஜக தலைவர் அல்ல எனவும் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் எனவும் அதிமுக - பாஜக இடையே சுமூகமான உறவு உள்ளது என அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...