கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரை நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்ட மூன்று பேர் தங்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை வைத்திருந்தால் உங்களுக்கு யோகம் பெருகும், நோய் நொடிகள் நீங்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய சாமிநாதன் இரிடியம் வாங்க சம்மதித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரிடியத்தின் விலை ரூ.25 லட்சம் என்று கூறியுள்ளனர். ரூ.5 லட்சத்தை முன்பணமாக தந்த சாமிநாதன் மீதிப்பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரிடியம் வாங்குவதற்காக சாமிநாதனை கோவைக்கு அழைத்துள்ளனர். கோவை வந்த சாமிநாதனிடம் காருக்குள் இரிடியம் இருப்பதாகவும், மீதிப்பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சாமிநாதன் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரை நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்ட மூன்று பேர் தங்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை வைத்திருந்தால் உங்களுக்கு யோகம் பெருகும், நோய் நொடிகள் நீங்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய சாமிநாதன் இரிடியம் வாங்க சம்மதித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரிடியத்தின் விலை ரூ.25 லட்சம் என்று கூறியுள்ளனர். ரூ.5 லட்சத்தை முன்பணமாக தந்த சாமிநாதன் மீதிப்பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரிடியம் வாங்குவதற்காக சாமிநாதனை கோவைக்கு அழைத்துள்ளனர். கோவை வந்த சாமிநாதனிடம் காருக்குள் இரிடியம் இருப்பதாகவும், மீதிப்பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சாமிநாதன் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.