கோவையில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் இரிடியம் வைத்துள்ளதாக கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரை நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்ட மூன்று பேர் தங்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை வைத்திருந்தால் உங்களுக்கு யோகம் பெருகும், நோய் நொடிகள் நீங்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 

இதை நம்பிய சாமிநாதன் இரிடியம் வாங்க சம்மதித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரிடியத்தின் விலை ரூ.25 லட்சம் என்று கூறியுள்ளனர். ரூ.5 லட்சத்தை முன்பணமாக தந்த சாமிநாதன் மீதிப்பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று இரிடியம் வாங்குவதற்காக சாமிநாதனை கோவைக்கு அழைத்துள்ளனர். கோவை வந்த சாமிநாதனிடம் காருக்குள் இரிடியம் இருப்பதாகவும், மீதிப்பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சாமிநாதன் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...