கோவையில் முதலாவது பார்மா துறை தொழில் மற்றும் பயிற்சி நிறுவனம் துவக்கம்

கோவை: டெல்லி மருந்துகள் பிரதிநிதி நிறுவனம், கோவை சரவணம்பட்டியில் புதிய பயிற்சி நிறுவனத்தை துவக்கியுள்ளனர். இது தமிழ்நாட்டின் கிளையாக செயல்படும். பார்மா தொழில் மற்றும் மருத்துவ பிரதிநிதியாக வர வேண்டும் என விரும்புவோருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதல் முறையாக ஒரு பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. பார்மா துறையில் சிறப்பான முறையில் பணியாற்ற இந்த பயிற்சி தயார்படுத்தும்.

கோவை: டெல்லி மருந்துகள் பிரதிநிதி நிறுவனம், கோவை சரவணம்பட்டியில் புதிய பயிற்சி நிறுவனத்தை துவக்கியுள்ளனர். இது தமிழ்நாட்டின் கிளையாக செயல்படும். பார்மா தொழில் மற்றும் மருத்துவ பிரதிநிதியாக வர வேண்டும் என விரும்புவோருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதல் முறையாக ஒரு பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. பார்மா துறையில் சிறப்பான முறையில் பணியாற்ற இந்த பயிற்சி தயார்படுத்தும்.

டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் (DIMR), நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் பங்கா இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தார். துவக்க விழாவில், DIMR பணியாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பிரதிநிதியாக வர விரும்புவோருக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டம் உள்ளது. இந்த பயிற்சி மையம், பயிற்சி அளிப்பதோடு வேலை வாய்ப்புக்கும் உதவி செய்கிறது. இளநிலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுள்ளவர்கள். நான்கு அடுக்கு பயிற்சி திட்டத்தில், தகவல் தொடர்பு திறன், ஆளுமை திறன், மருத்துவ பெயர்கள் மற்றும் அதை புரிந்து கொள்ளுதல் பயிற்சிகள் தரப்படுகின்றன.

டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில், பார்மா மேலாண்மையில், பயிற்சி புத்தகம், மனித உடலமைப்பு மற்றும் அங்கவியல் உள்ளிட்ட கல்வி முறைகள் இடம் பெறுகின்றன’ என்றனர்.

பார்மா துறையில் சிறந்த பணியாளர்களையும், தொழில் முனைவோரையும் உருவாக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம். மருத்துவ பிரதிநிதிகளுக்கு பயிற்சி தர ஆசியாவிலேயே இந்த நிறுவனம் மட்டும் தான் உள்ளது. பயிற்சியில் பங்கேற்போருக்கு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றவும், வேலை வாய்ப்பு பெறவும் இது வழிகாட்டுகிறது.

இந்த படிப்பில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் நிறுவனத்தின் இயக்குனர் பிரவீன் குமாரை 96002 44634 என்ற எண்ணிலும், [email protected] என்ற இணையத்தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...