கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலையில் கணபதி ஹோம பூஜை நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு கொடியும் உற்சவரும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
தினமும் விசேச பூஜைகளும் அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை 7ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், சனிக்கிழமை 8ம் தேதி பால்காவடி பறவை காவடி ஊர்வலத்துடன் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் இரவு மகா அபிஷேகமும், தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.