வால்பாறையில் 15ம் ஆண்டு தைப்பூச விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது!

கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலையில் கணபதி ஹோம பூஜை நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு கொடியும் உற்சவரும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 



இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

தினமும் விசேச பூஜைகளும் அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை 7ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், சனிக்கிழமை 8ம் தேதி பால்காவடி பறவை காவடி ஊர்வலத்துடன் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் இரவு மகா அபிஷேகமும், தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...