கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் சிகிச்சைகள் பெற்று வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் சிகிச்சைகள் பெற்று வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொடும் வைரஸ்களால் பரவும் நோய்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறுபட்ட வைரஸ்கள் காலத்திற்கு ஏற்ப பரவி பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பலர் பலியாகி விட்டனர். மேலும் பலர் நோய் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த நோய் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயானது கேரளா மருத்துவ மாணவிக்கு வந்தது. பின்னர் அடுத்தடுத்து என கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதன் அறிகுறி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு முகாமானது சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் உத்தரவின் பேரில் மருத்துவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல, இவர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்ளை நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு நோயின் தன்மை குறித்தும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விளக்கி வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம், பீதி பொதுமக்களுக்கு இருக்கும் வரை தினமும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்த சுகாதாரத்துறை மருத்துவர்கள் தினமும் 10 முதல் 15 முறையாவது கைகளை நன்கு தூய்மையாக கழுவினால் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொடும் வைரஸ்களால் பரவும் நோய்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறுபட்ட வைரஸ்கள் காலத்திற்கு ஏற்ப பரவி பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பலர் பலியாகி விட்டனர். மேலும் பலர் நோய் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த நோய் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயானது கேரளா மருத்துவ மாணவிக்கு வந்தது. பின்னர் அடுத்தடுத்து என கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதன் அறிகுறி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு முகாமானது சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் உத்தரவின் பேரில் மருத்துவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல, இவர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்ளை நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு நோயின் தன்மை குறித்தும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விளக்கி வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம், பீதி பொதுமக்களுக்கு இருக்கும் வரை தினமும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்த சுகாதாரத்துறை மருத்துவர்கள் தினமும் 10 முதல் 15 முறையாவது கைகளை நன்கு தூய்மையாக கழுவினால் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவித்தனர்.