கோவை: கோவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின் போது நோயாளியை அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சுக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி ஆணையாளரின் அதிவிரைவு படையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை: கோவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின் போது நோயாளியை அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சுக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி ஆணையாளரின் அதிவிரைவு படையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான நேற்று கோவையில் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடத்தப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று உக்கடம் பகுதியில் இருந்து இந்த பேரணி துவங்கியது. இந்தப் பேரணியில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின் போது பாதுகாப்புப் பணிக்காக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, 108 ஆம்புலன்ஸ் அவசரம் அவசரமாக நோயாளியை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, டவுன்ஹால் அருகே 108 ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட மாநகர காவல் ஆணையாளர் தனது அதிவிரைவு படையினரை அனுப்பி போக்குவரத்தை சரி செய்து 108 ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.